ஓசூர், மே 14- முட்டைகோஸ் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயி கள் பறிக்காமல் செடிகளில் விட்டுள்ள தால், அவற்றை ஆடு, மாடுகள் சாப்பிட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1,000 ஹெக்டேர் பரப்பளவில் முட்டைகோஸ் சாகுபடி நடக்கிறது. 65 நாள் பயிரான முட்டைகோஸ், ஒரு ஏக்கருக்கு, 20 டன் வரை மகசூல் கிடைக்கும். 70 முதல், 80 கிலோ கொண்ட ஒரு மூட்டை, 500 ரூபாய்க்கு விலை போனால், விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் வரும். கொரோனா ஊரடங்கு காரண மாக, மாவட்டத்தில் சாகுபடி செய்யப் பட்ட முட்டைகோஸ், வெளி மாநி லங்களுக்கு அனுப்ப முடியவில்லை. உள்ளூர் சந்தைகளுக்கு வரத்து அதி கரித்ததால், முட்டைகோஸ் விலை கிடுகிடுவென சரிய துவங்கியுள்ளது.
விவசாயிகள் முட்டைகோஸ் களை, வாகனங்களில் ஏற்றி சென்று வியாபாரிகளிடம் விற்பனை செய் தால், ஒரு மூட்டைக்கு, 160 ல் இருந்து, 200 ரூபாய் வழங்கப்படு கிறது. இது பறிப்பு கூலி, வாகன வாடகை உள்ளிட்ட செலவுகளுக்கு கூட போதுமானதாக இல்லை. தோட்டத்திற்கு நேரடியாக வந்து வியாபாரிகளை வாங்கி செல்லு மாறு கூறினால், ஒரு மூட்டை முட்டை கோஸ், 30 ரூபாய்க்கு கீழ் கேட்கின்ற னர். இதனால், விவசாயிகளுக்கு கட்டுப் படியாகும் விலை கிடைப்பதில்லை. அவற்றை பறிக்காமல் வயல்களில் விட்டுள்ளனர். கெலமங்கலம் அடுத்த மல்லே பாளையம் பகுதியில், முட்டைகோஸ் பறிக்காமல் வயல்களில் விடப் பட்டுள்ள தால், ஆடு, மாடுகள் சாப் பிட்டு வருகின்றன. கெலமங்கலம் தோட்டக்கலை உதவி இயக்குனர் அனிதா, தோட்டத்தை நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, விவ சாயிகள் கோரிக்கை விடுத்தனர்.